Published : 29 Sep 2025 06:21 AM
Last Updated : 29 Sep 2025 06:21 AM
சென்னை: தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் அக். 7 முதல் நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(எஸ்சிஇஆர்டி) சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: நடப்பு கல்வியாண்டில்(2025-26) 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் சார்ந்து 2-ம் பருவத்துக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி அக்டோபர் 7 முதல் 10-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பயிற்சி நடைபெறும் நாளில் தொடக்க வகுப்புகளில் கல்வி சார்ந்த பணிகள் பாதிக்கப்படக்கூடாது. ஆசிரியர் இல்லை எனில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் மாற்று ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT