Published : 27 Sep 2025 07:49 AM
Last Updated : 27 Sep 2025 07:49 AM

இந்தியா வளர்ந்த நாடாக மாற அறிவியல் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முன்னேற வேண்டும்: விஐடி வேந்தர் கருத்து

வேலூர்: இந்​தியா வளர்ந்த நாடாக மாறு​தவதற்கு அறி​வியல் தொழில் நுட்​பத்​தில் தொடர்ந்து முன்​னேற வேண்​டும் என விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் கூறி​னார். வேலூர் விஐடி பல்​கலைக்​கழகத்​தில் ‘கி​ரா​வி​டாஸ்​-2025’ என்ற தொழில்​நுட்ப அறி​வு​சார் திரு​விழா நேற்று தொடங்​கியது. 3 நாட்​கள் நடை​பெறும் இவ்​விழா​வில் 207 நிகழ்​வு​கள், 57 பயிற்சி பட்​டறை​கள், 51 ஹேக்​கத்​தான், ரோபோ வார், ட்ரோன் ஷோ உள்​ளிட்​ட​வற்​றில் 40 ஆயிரம் மாணவர்​கள் பங்​கேற்​றுள்​ளனர்.

தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து வேந்​தர் கோ.​விசுவ​நாதன் பேசி​ய​தாவது: 1984-ல் 180 மாணவர்​களு​டன் தொடங்​கப்​பட்ட இக்​கல்வி நிறு​வனத்​தில் தற்​போது 1 லட்​சம் மாணவர்​கள் பயில்​கின்​றனர். அரசு பல்​கலைக்​கழகங்​கள், கல்​லூரி​களில் அதிக மாணவர்​களை சேர்க்க வேண்​டும்.

ஆனால், கட்​டிடம், ஆய்​வகம், ஆசிரியர் நியமனம் உள்​ளிட்ட செல​வினங்​கள் அதி​க​மாக இருப்​ப​தால், மாணவர் சேர்க்​கையை அரசு கட்​டுப்​படுத்​துகிறது. இந்​நிலை மாறி, ஏழை, நடுத்தர மக்​கள் அதிக அளவில் உயர் கல்வி பெற வேண்​டும். இந்​தியா வளர்ந்த நாடாக மாற அறி​வியல், தொழில்​நுட்​பத்​தில் முன்​னேற வேண்​டும். மாணவர்​கள் அறி​வியல், தொழில்​நுட்​பம் மற்​றும் ஆராய்ச்​சி​யில் அதிக ஆர்​வம் காட்ட வேண்​டும்.

அபு​தாபி சிறிய நாடாக இருந்​தா​லும், பொருளா​தா​ரத்​தில் வளம் பெற்ற நாடாக உள்​ளது. அந்​நாட்​டின் மொத்த மக்​கள் தொகை​யில் 20 சதவீதம் பேர் உள்​ளூர் மக்​கள். மீத​முள்ள 80 சதவீதம் பேர் மற்ற நாட்​டைச் சேர்ந்​தவர்​கள். அவர்​கள் 1 டிரில்​லியன் டாலர் முதலீடு​களை ஈர்க்​கின்​றனர். அவர்​களிடம் இருந்து நாம் கற்​றுக் கொள்ள வேண்​டியது நிறைய இருக்​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

அபுதாபி அமைச்சர்... இந்​நிகழ்வை தொடங்​கி​வைத்து அபு​தாபி நகராட்சி நிர்​வாகத் துறை அமைச்​சர் மஜித் அலி அல் மன்​சூரி பேசும்​போது, “செயற்கை நுண்​ணறி​வு, உயிரி தொழில்​நுட்​பம், விண்​வெளி ஆய்​வு, பரு​வநிலை மாற்​றம் ஆகிய சவால்​களுக்கு மாணவர்​கள் தீர்​வு​காண வேண்​டும். புதுமை என்​பது தொழில்​நுட்​பத்தை மட்​டும் மாற்​று​வது அல்ல, மனித குல வாழ்க்​கையை மேம்​படுத்​து​வ​தாக இருக்க வேண்​டும்” என்​றார்.

நிகழ்ச்​சி​யில், கவுரவ விருந்​தினர்​களாக பிர​வீனா பீமவரப்​பு, ஆனந்த் நரசிம்​மன் ஆகியோர் பங்​கேற்​றனர். விஐடி துணைத் தலை​வர் சேகர் விசுவ​நாதன், செயல் இயக்​குநர் சந்​தியா பென்​டரெட்​டி, துணைவேந்​தர் காஞ்​சனா பாஸ்​கரன், இணை துணைவேந்​தர் பார்த்​த​சா​ரதி மல்​லிக் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x