Published : 27 Sep 2025 05:49 AM
Last Updated : 27 Sep 2025 05:49 AM
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு அக். 6-ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது.
அதன்படி, இரண்டு சுற்று கலந்தாய்வு முடிவில் காலியாகவுள்ள இடங்கள், மாணவர்கள் சேராததால் ஏற்படும் காலியிடங்கள் மற்றும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள இடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு அக்.6-ம் தேதி ஆன்லைனில் தொடங்கவுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT