Published : 18 Sep 2025 03:50 AM
Last Updated : 18 Sep 2025 03:50 AM

பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு குறும்பட போட்டிகள்: மாணவர்கள் பங்கேற்க யுஜிசி அறிவுறுத்தல்

சென்னை: பேரிடர் மேலாண்மை விழிப்​புணர்வு தொடர்​பான குறும்​படப் போட்​டிகளில் மாணவர்​கள், ஆசிரியர்​கள் பங்​கேற்க வேண்​டுமென யுஜிசி அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து பல்​கலை மானியக்​குழு(​யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​.ஜோஷி, அனைத்து உயர்​கல்வி நிறு​வனங்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றிக்கை விவரம்: பரு​வநிலை மாற்​றம், துரித நகர வளர்ச்சி காரண​மாக இயற்கை பேரிடர்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. எனவே, பேரிடர் மேலாண்மை நடவடிக்​கை​களில், இளைஞர்​கள் மற்​றும் கல்​வி​யாளர்​களின் பங்​களிப்பு மிக​வும் அவசி​ய​மாகும். மத்​திய உள்​துறை​யின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணை​யம் சார்​பில், ‘பேரிடர் மேலாண்​மை’ என்ற தலைப்​பில் குறும்​படம் அல்​லது ஏஐ மூலம் உரு​வாக்​கப்​பட்ட குறும்​படம் போட்டி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

நாடு முழு​வதும் உள்ள உயர்​கல்வி நிறு​வனங்​களை சேர்ந்த மாணவர்​கள், பேராசிரியர்​கள் இடையே தொழில்​நுட்ப வசதி​களை கொண்டு படைப்​பாற்​றலை ஊக்​கு​விப்​பது, பேரிடர் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் மேற்​கொள்​வது குறித்து விழிப்​புணர்வு ஏற்​படுத்த இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இயற்கை பேரிடர் அபாய தணிப்​பு த​யார் நிலை, தடுப்பு நவடிக்​கை,
மீள்​தல் எனும் தலைப்​பில் மாணவர்​கள், ஆசிரியர்​கள் படங்​களை தயாரிக்​கலாம்.

அதன் நீளம் 2 முதல் 3 நிமிடங்​கள் கொண்​ட​தாக இருக்க வேண்டும். ​இந்த போட்​டி​யில் வெற்றி பெறும் நபர்​களுக்கு முதல் பரி​சாக ரூ.5 லட்​சம்​ வழங்​கப்​படும். தங்​கள் படைப்​பு​களை மாணவர்​கள், வரும் செப்​டம்​பர் 30-ம் தேதி​க்குள் சமர்​ப்பிக்க வேண்​டும். ஆர்​வ​முள்​ளவர்​கள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணை​யத்​தின் www.ndma.gov.in என்ற இணை​யதளத்​தில் கூடு​தல் விவரங்​களை அறிந்து கொள்​ளலாம். எனவே, உயர்​கல்வி நிறு​வனங்​கள் தங்​கள் கல்​லூரி மாணவர்​கள், பேராசிரியர்​கள் இந்த போட்​டி​யில் பங்​கேற்க ஊக்​குவிக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x