Published : 17 Sep 2025 05:22 AM
Last Updated : 17 Sep 2025 05:22 AM

தமிழகத்தில் கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள்: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி

சென்னை: தமிழகத்​தில் 350 இடங்​கள் உட்பட நாடு முழு​வதும் கூடு​தலாக 6,850 எம்​பிபிஎஸ் இடங்​களுக்கு அனு​மதி அளித்து தேசிய மருத்​துவ ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான முதல் சுற்று கலந்​தாய்வு கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22-ம் தேதி வரை https://mcc.nic.in என்ற இணை​யதளம் வாயி​லாக ஆன்​லைனில் நடை​பெற்​றது.

மீத​முள்ள இடங்​கள் மற்​றும் முதல் சுற்று கலந்​தாய்​வில் இடஒதுக்​கீடு பெற்​றும் கல்​லூரி​களில் சேராதவர்​களால் ஏற்​பட்​டுள்ள இடங்​களை நிரப்​புவதற்​கான 2-ம் சுற்று கலந்​தாய்வு கடந்த 4-ம் தேதி ஆன்​லைனில் தொடங்​கியது. கலந்​தாய்வு வரும் 19-ம் தேதி வரை நடக்க உள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

கூடு​தல் இடங்​களை சேர்க்க இருப்​ப​தா​லும், என்​ஆர்ஐ ஆவணங்​களை ஆய்வு செய்ய வேண்டி இருப்​ப​தா​லும், 2-ம் கட்ட கலந்​தாய்வு நீட்​டிக்​கப்​பட்​டது. அதன்படி, 2-ம் சுற்று கலந்​தாய்வு ஆன்​லைனில் செப்​.10-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. அகில இந்​திய கலந்​தாய்வு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ள​தால், தமிழகத்​தில் மாநில கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.

இந்​நிலை​யில், நாடு முழு​வதும் கூடு​தல் மருத்​துவ இடங்​கள் அனு​ம​திக்​கான கல்​லூரி​கள் பட்​டியலை தேசிய மருத்​துவ ஆணை​யம் வெளி​யிட்​டுள்​ளது. அதில், தமிழகத்​தில் 7 தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் தலா 50 இடங்​கள் என 350 எம்​பிபிஎஸ் இடங்​களுக்கு தேசிய மருத்​துவ ஆணை​யம் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. நாடு முழு​வதும் உள்ள அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் 6,850 எம்​பிபிஎஸ் இடங்​கள் கூடு​தலாக அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளன. இதன்​மூலம் மருத்​துவ இடங்​கள் எண்​ணிக்கை 1,23,700 ஆக உயர்ந்துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x