Published : 14 Sep 2025 01:28 AM
Last Updated : 14 Sep 2025 01:28 AM
சென்னை: கல்லூரிகள் இணையக் குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பாக, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: நாடாளுமன்ற நிலைக்குழு தனது 254-ம் அறிக்கையில், உயர்கல்வி நிறுவனங்களில், தொழில்நுட்பம்அல்லாத பாடத் திட்டங்களிலும்,சைபர் பாதுகாப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
குறிப்பாக, இணைய குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, பொறுப்பான ஆன்லைன் நடத்தை மற்றும் தரவு தனியுரிமை குறித்த அடிப்படை அம்சங்களை பயிற்றுவிக்க அறிவுத்தப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளுக்கு ஏற்ப உரிய வழிகாட்டுதல்படி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இணையக் குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பாக கல்லூரிகள் விழிப்புணர்வுஏற்படுத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT