Published : 14 Sep 2025 12:51 AM
Last Updated : 14 Sep 2025 12:51 AM

குரூப்-2 தேர்வுக்கு செப்.23-ல் 3-வது கட்ட கலந்தாய்வு

சென்னை: குரூப்-2 தேர்​வுக்​கான 3-வது கட்ட சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்​வு, வரும் 23-ம் தேதி நடை​பெறும் என டிஎன்​பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக, டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் எஸ்​.கோ​பால சுந்​தர​ராஜ் வெளி​யிட்​டுள்ள செய்​திக் குறிப்​பு: கடந்த 2024-ம் ஆண்டு நடத்​தப்​பட்டஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்-2 ஏ தேர்​வில் உள்ள காலிப் பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான 3-வது கட்ட சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்வு வரும் 23-ந் தேதி அன்று நடை​பெற உள்​ளது. இதற்கு அழைக்​கப்​பட்​டுள்ள தேர்​வர்​களின் பட்​டியல் தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

அழைப்​பாணையை இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்து கொள்ளவேண்​டும். இதுதொடர்​பாக, சம்​பந்​தப்​பட்ட தேர்​வர்​களுக்கு குறுஞ்​செய்தி மற்​றும் மின்​னஞ்​சல் வாயி​லாக தகவல் தெரிவிக்​கப்​படும். அழைப்​பாணை தனியே அஞ்​சல் மூலம் அனுப்பப்படமாட்​டாது. சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு அழைக்​கப்​படும் அனை​வரும் கலந்​தாய்​வுக்கு அனு​ம​திக்​கப்​பட்டு தெரிவுசெய்​யப்​படு​வர் என்​ப​தற்கு உறுதி அளிக்க இயலாது. குறிப்​பிட்ட நாள் மற்​றும் நேரத்​தில் பங்​கேற்க தவறி​னால், மறு​வாய்ப்பு அளிக்​கப்பட மாட்​டாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x