Published : 13 Sep 2025 05:46 AM
Last Updated : 13 Sep 2025 05:46 AM
சென்னை: ஆசிரியர் பணி தகுதிக்கான டெட் தேர்வு எழுத 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான டெட் தேர்வு நவம்பர் 15, 16-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஆக. 11-ம் தேதி தொடங்கி செப். 10-ம் தேதியுடன் நிறைவடைந்தது. தேர்வு எழுத 4.80 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கிடையே, பணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் டெட் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, தற்போது நடைபெற உள்ள டெட் தேர்வை எழுதுவதற்கு ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டெட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் (செப். 13) நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT