Published : 10 Sep 2025 05:56 AM
Last Updated : 10 Sep 2025 05:56 AM

சாதிய எண்ணம் கொண்ட பள்ளி ஆசிரியர்களை மாற்ற நடவடிக்கை

சென்னை: ​சா​திய எண்​ணம் கொண்ட ஆசிரியர்​கள் வேறு பள்​ளிக்கு மாற்​றப்பட வேண்​டும் என பள்​ளிக் கல்​வித் துறை உத்தரவிட்டுள்​ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு பள்​ளிக்​கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​: பள்​ளி, கல்​லூரி மாணவர்​களிடையே சாதி, இன உணர்​வு​கள் காரண​மாக உரு​வாகும் வன்​முறை​களைத் தவிர்க்​க​வும், நல்​லிணக்​கம் ஏற்​படுத்​த​வும், வழி​முறை​களை வகுக்​க​வும் ஓய்​வு​ பெற்ற நீதிபதி கே.சந்​துரு தலை​மை​யில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்​டது.

அவரது பரிந்​துரைகளை செயல்​படுத்​தும் வகை​யில் பள்​ளி​களில் சாதி அல்​லது வகுப்​பு​வாத எண்​ணத்தை மாணவர்​களிடையே ஏற்படுத்​தும் ஆசிரியர் மீது பெறப்​படும் புகார் குறித்து முதன்​மைக் கல்வி அலு​வலர் உடனடி​யாக விசா​ரணை மேற்​கொண்டு சம்பந்தப்​பட்ட ஆசிரியரை வேறு பள்​ளிக்கு மாற்ற வேண்​டும்.

மாணவர்​களுக்கு மிக​வும் பிற்​படுத்​தப்​பட்​டோர், ஆதி திரா​விடர் நலத்​துறை மூலம் வழங்​கக்​கூடிய கல்வி உதவித் தொகை விவரங்கள் ரகசி​ய​மாகப் பராமரிக்​கப்​படு​வது அவசி​யம். மாணவர்​களிடையே ஒற்​றுமையை வளர்க்​கும் ‘மகிழ் முற்​றம்’ குழு திட்டத்தை பள்​ளி​களில் முன்​னுரிமை அளித்து செயல்​படுத்த வேண்​டும்.

பள்​ளி​களில் மாணவர்​கள் கைபேசி பயன்​படுத்​து​வது தெரிய வந்​தால், அதை பறி​முதல் செய்து பெற்​றோரிடம் ஒப்​படைக்க வேண்டும். பள்​ளி​களில் திருக்​குறள் அறநெறி வகுப்​பு​களை தவறாமல் நடத்த வேண்​டும். ‘மாணவர் மனசு’ புகார் பெட்​டியை வாரம் ஒரு முறை பள்ளி மேலாண்​மைக் குழு தலை​வர், தலைமை ஆசிரியர் முன்​னிலை​யில் திறந்து அதில் உள்ள தபால்​களின் எண்​ணிக்​கையை பதிவு செய்​து, அதுகுறித்து விசா​ரணை செய்து மாவட்​டக் கல்வி அலு​வலர், முதன்​மைக் கல்வி அலு​வலர்​களிடம் சமர்ப்​பிக்க வேண்​டும்​. இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x