Published : 09 Sep 2025 12:44 AM
Last Updated : 09 Sep 2025 12:44 AM

சிடெட் தேர்வுக்கான அறிவிப்பாணை விரைவில் வெளியாகும்

சென்னை: மத்​திய அரசின் இலவச கட்​டாய கல்வி உரிமை சட்​டத்​தின்​படி, ஆசிரியர் பணி​யில் சேர்​வதற்​கு, மத்​திய ஆசிரியர் தகுதி தேர்​வில் (சிடெட்) கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்​டும்.

இரண்டு தாள்​கள் கொண்ட இத்தேர்வை மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யம் (சிபிஎஸ்இ) ஆண்​டு​தோறும் ஜூலை, டிசம்​பர் மாதங்​களில் நடத்தி வரு​கிறது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல் தாள் தேர்​வும், பட்​ட​தாரி ஆசிரியர் பணிக்கு 2-ம் தாள் தேர்​வும் நடத்​தப்​படு​கிறது.

இந்​நிலை​யில், அடுத்த தேர்வு டிசம்​பர் முதல் வாரத்​தில் நடத்​தப்பட உள்​ளது. அதற்​கான அறி​விப்​பாணை ஓரிரு நாளில் வெளி​யாகும் என்று தெரி​கிறது. விருப்​பம் உள்ள பட்​ட​தா​ரி​கள் https://ctet.nic.in என்ற இணை​யதளம் மூலம் விண்​ணப்​பிக்க வேண்​டும்.

மொத்​தம் 150 மதிப்​பெண்​களுக்கு தமிழ் உட்பட 20 மொழிகளில் நேரடி முறை​யில் தேர்வு நடை​பெறும். தேர்வு கட்​ட​ணம், பாடத்​திட்​டம் உள்​ளிட்ட விவரங்​கள் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​படும் என்று சிபிஎஸ்இ அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x