Published : 04 Sep 2025 05:52 AM
Last Updated : 04 Sep 2025 05:52 AM
சென்னை: பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் 12, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும், தமிழ்ப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா திருச்சியில் செப். 7-ல் நடைபெறவுள்ளது.
திருச்சி காட்டூரில் உள்ள மான்போர்ட் பள்ளியில் செப். 7-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள விழாவுக்கு தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள், உரிய அடையாளச் சான்றுடன் வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT