Published : 02 Sep 2025 05:25 AM
Last Updated : 02 Sep 2025 05:25 AM

அரசு கல்லூரிகளில் 560 கவுரவ விரிவுரையாளர்கள்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

சென்னை: அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களில் கவுரவ விரிவுரை​யாளர் பணிக்கு 560 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்களது பெயர் பட்​டியல் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக அமைச்​சர் கோவி.செழியன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஏழை, எளிய மாணவர்​கள் உயர்​கல்வி பெற வேண்​டும், அனை​வருக்​கும் சமமான உயர்​கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்​டும் என்​ப​தற்​காக, நடப்பு கல்வி ஆண்​டில் மட்​டும் புதி​தாக 15 அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. மாணவர்​களின் தேவைக்​கேற்ப, கலை, அறி​வியல் கல்​லூரி​களில் பல்​வேறு பாடப் பிரிவு​களில் புதி​தாக 15 ஆயிரம் இடங்​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன.

இதில் நிரந்தர உதவி பேராசிரியர்​கள் பணி​யமர்த்​தப்​படும் வரை, மாணவர்​களின் கற்​றலில் தொய்வு ஏற்​ப​டா​மல் இருக்க, கவுரவ விரிவுரை​யாளர்​களை தற்​காலிக​மாக நியமிக்க, இணை​யதள விண்​ணப்ப பதிவு கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்​கப்​பட்​டு, விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டன.

விண்​ணப்​ப​தா​ரர்​களில் தகு​தி​யானவர்​களுக்கு ஆகஸ்ட் 18 முதல் 28 வரை அந்​தந்த மண்​டலங்​களில் நேர்​காணல் நடத்​தப்​பட்​டது. நேர்​காணல் முடிந்​துள்ள நிலை​யில், தேர்வு செய்​யப்​பட்​டுள்ள 560 தற்​காலிக கவுரவ விரிவுரை​யாளர்​கள் பட்​டியல், இணை​யதளத்​தில் (tngasa.org) வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

தேர்​வானவர்​கள் தங்​களது பயனர் குறி​யீடு (User ID), கடவுச்​சொல் (Password) பயன்​படுத்​தி, தாங்​கள் தேர்​வான கல்​லூரி மற்​றும் விவரங்​களை பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். சம்​பந்​தப்​பட்ட கல்​லூரி​யில் செப்​டம்​பர் 8-ம் தேதிக்​குள் அவர்​கள் பணி​யில் சேர வேண்​டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x