Published : 27 Aug 2025 07:33 AM
Last Updated : 27 Aug 2025 07:33 AM

பொறியியல் கலந்தாய்வில் 800 எஸ்சி மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு: இறுதி ஒதுக்கீட்டு ஆணை இன்று வழங்கப்படும்

சென்னை: எஸ்சி அருந்​தி​யர் பிரிவு ஒதுக்​கீட்டு காலி​யிடங்​களை எஸ்சி மாணவர்​களைக் கொண்டு நிரப்ப நடத்​தப்​பட்ட பொறியியல் கலந்​தாய்​வில் 796 பேருக்கு தற்​காலிக ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​பட்​டது. அதை உறு​தி​செய்​யும் மாணவர்​களுக்கு இன்று இறுதி ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​படும்.

பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்​கான பொது கலந்​தாய்​வும் அதைத் தொடர்ந்து துணை கலந்​தாய்​வும் நடந்து முடிந்​து​விட்​டன. கலந்​தாய்​வின்​போது எஸ்சி அருந்​த​தி​யர் பிரி​வில் நிரப்​பப்​ப​டா​மல் இருக்​கும் இடங்​கள் கலந்​தாய்வு மூலம் எஸ்சி மாணவர்​களைக் கொண்டு நிரப்​பப்​படு​வது வழக்​கம்.

அந்த வகை​யில் இந்த ஆண்டு எஸ்சி அருந்​த​தி​யர் பிரி​வில் நிரப்​பப்​ப​டா​மல் 963 இடங்​கள் உள்​ளன. அதில் அகாட​மிக் பிரி​வில் 874 இடங்​களும், தொழிற்​கல்வி பொதுப்​பிரி​வில் 84 இடங்​களும், அரசு கல்​லூரி தொழிற்​கல்வி பிரி​வில் 5 இடங்​களும் இடம்​பெற்றுள்ளன. எஸ்சி - அருந்​த​தி​யர் பிரிவு காலி​யிடங்​களை நிரப்​புவதற்​கான கலந்​தாய்​வுக்கு 36,384 எஸ்சி மாணவர்​கள் தகுதி பெற்றிருந்​தனர்.

அவர்​களுக்​கான இணை​ய​வழி கலந்​தாய்வு நேற்று முன்​தினம் (திங்​கள்) தொடங்​கியது) அதில் பங்​கேற்று கல்​லூரியை தேர்வு செய்​தவர்​களில் 796 பேருக்கு தற்​காலிக ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​பட்​டது. அவர்​கள் இதை உறுதி செய்ய நேற்று இரவு 7 மணி வரை அவகாசம் அளிக்​கப்​பட்​டது.

அதன்​படி, தற்​காலிக ஒதுக்​கீட்டு ஆணையை உறுதி செய்த மாணவர்​களுக்கு இன்று (புதன்) காலை 10 மணிக்கு இறுதி ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​படும். எஸ்சி அருந்​த​தி​யர் பிரிவு இடங்​களை நிரப்​புவதற்​கான கலந்​தாய்வு முடிவடைந்த நிலை​யில், நடப்பு கல்வி ஆண்​டுக்​கான பொறி​யியல் சேர்க்கை கலந்​தாய்வு பணி​கள் நேற்​றுடன் நிறைவடைந்​து​விட்​ட​தாக தொழில்​நுட்​பக்​கல்வி இயக்​ககம் அறி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x