Published : 25 Aug 2025 05:03 AM
Last Updated : 25 Aug 2025 05:03 AM
சென்னை: பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டசுற்றறிக்கை: அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டின்படி முதுநிலை ஆசிரியர்களாக பணிமாறுதல் அளிக்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி அவர்களை பணி விடுவிப்பு செய்ய வேண்டும். அவர்கள் பட்டதாரி ஆசிரியர் பதவிக்குரிய கல்வித் தகுதியை அவர்கள் பெற்றுள்ளனரா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக அதன்படி நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் தகுதியான 39 அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கி அவர்களுக்கான அரசுப் பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT