Published : 25 Aug 2025 04:56 AM
Last Updated : 25 Aug 2025 04:56 AM

ஐக்​கிய நாடு​களின் வளர்ச்சி திட்​டத்​தில் தமிழக பள்ளி மாணவர்​கள் 6 பேர் சர்​வ​தேச தூத​ராக தேர்வு

கோப்புப் படம்

சென்னை: ஐக்​கிய நாடு​கள் பொருளா​தார மற்​றும் சமூக கூட்​டமைப்​பால் அங்​கீகரிக்​கப்​பட்ட நிலை​யான வளர்ச்சி கவுன்​சில் சார்பில் 5-வது சர்​வ​தேச இளைஞர் மன்ற மாநாடு, தாய்​லாந்​தின் பாங்​காக் நகரில் ஆக. 21, 22-ம் தேதி​களில் நடை​பெற்​றது.

இதில் இந்​தி​யா உட்பட 62 நாடு​களி​லிருந்து பள்ளி மாணவர்​கள் பங்​கேற்​றனர். இந்த மாநாட்​டுக்கு தமிழகத்​திலிருந்து 8 முதல் பிளஸ்-1 வகுப்பு வரை பயிலும் 17 வயதுக்​குட்​பட்ட மாணவ, மாணவி​களில் நிலை​யான வளர்ச்​சிக்​கான இலக்​கு​கள் குறித்த அறி​வு, சிறந்த தகவல் தொடர்பு திறன் கொண்டவர்கள் பள்ளி சார்​பில் பரிந்​துரைக்​கப்​பட்​டிருந்​தனர்.

அவர்​கள் தமிழகத்​தின் சிறந்த செயல்​பாடு​களை ஒரு நிமிட வீடியோ​வாக​வும் சமர்ப்​பித்​தனர். இதில் பள்​ளிக்​கல்​வித் துறை​யால் தேர்வு செய்​யப்​பட்ட தலா 3 மாணவ, மாணவி​கள், ஒரு ஆசிரியர் அரசுப் பள்​ளி​கள் சார்​பில் பாங்​காக்​குக்கு அழைத்​துச் செல்லப்பட்டனர்.

அதன்​படி தேர்வு செய்​யப்​பட்ட வேலூர் அரசு பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளியைச் சேர்ந்த ச.நிஷாந்​தினி, தஞ்​சாவூர் அரசு மாதிரி மேல்​நிலைப் பள்ளி மாணவி மா.தரணிஸ்ரீ, நாமக்​கல் கீரம்​பூர் மாவட்ட மாதிரி மேல்​நிலைப் பள்ளி மாணவி யாழினி, சேலம் நகராட்சி ஆண்​கள் மேல்​நிலைப் பள்ளி மாணவர் அஷ்​வாக், நாமக்​கல் குமாரப்​பாளை​யம் அரசு ஆண்​கள் மேல்​நிலைப் பள்ளி மாணவர் கமலேஷ், செங்​கல்​பட்டு கண்​டிகை அரசு மேல்​நிலைப் பள்ளி மாணவர் ராகுல் ஆகியோர் ஐக்​கிய நாடு​களின் வளர்ச்​சித் திட்​டத்​தின் மூலம் சர்​வ​தேச அளவில் பிராண்டு தூத​ராக​வும் அங்​கீகரிக்​கப்​பட்​டுள்​ளனர். இது தமிழக அரசுப் பள்​ளி​களின் செயல்​பாடு​களுக்கு கிடைத்த மிகச்​சிறந்த வெற்​றி​யாகக் கருதப்​படு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x