Published : 22 Aug 2025 01:09 AM
Last Updated : 22 Aug 2025 01:09 AM

பொறியியல் சேர்க்கை துணை கலந்தாய்வு தொடக்கம்

சென்னை: பொறி​யியல் சேர்க்​கைக்​கான துணை கலந்​தாய்வு நேற்று தொடங்​கியது. இதில் 20 ஆயிரத் ​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் கலந்​து​கொள்​கின்​றனர்.

பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்​றவர்​கள், பொது கலந்​தாய்​வில் பங்​கேற்க தவறிய​வர்​களுக்​காக பொறி​யியல் துணை கலந்​தாய்வு நடத்​தப்​படு​கிறது. அந்த வகை​யில், நடப்பு கல்வி ஆண்​டில் துணை கலந்​தாய்​வில் பங்​கேற்க 20 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் விண்​ணப்​பித்​தனர். அதில் தகு​தி​யான 20,662 பேரின் விண்​ணப்​பங்​கள் ஏற்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில், ஏற்​கெனவே அறி​வித்​த​படி, அவர்​களுக்​கான துணை கலந்​தாய்வு இணைய வழி​யில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்​கியது. மாணவர்​கள் விருப்​ப​மான கல்​லூரியை தேர்வு செய்ய இன்று மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இதைத்தொடர்ந்​து, கல்​லூரி விருப்​பத்தை தேர்வு செய்​தவர்​களுக்கு நாளை (ஆக.23) காலை 10 மணிக்கு தற்​காலிக ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​படும். அதை நாளை இரவு 7 மணிக்​குள் உறுதி செய்ய வேண்​டும். உறுதி செய்த மாணவர்​களுக்கு 24-ம் தேதி காலை 10 மணிக்கு இறுதி ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​படும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x