Published : 20 Aug 2025 12:19 AM
Last Updated : 20 Aug 2025 12:19 AM
சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. இதில் 16 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
நடப்பு கல்வி ஆண்டில் (2025-26), பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வின் இறுதி சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்த மாணவர்களுக்கு இன்று (20-ம் தேதி) இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையே, பிளஸ் 2 துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பொது கலந்தாய்வில் பங்கேற்க தவறிய மாணவர்கள் ஆகியோருக்கான துணை கலந்தாய்வு நாளை (21-ம் தேதி)தொடங்கி 23-ம் தேதி வரை இணையவழியில் நடைபெறுகிறது. இதற்கு 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பி்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை கலந்தாய்வு முடிவடைந்த பிறகு, பொறியியல் படிப்பில் எஸ்சி அருந்ததியர் ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களில், எஸ்சி மாணவர்கள் சேருவதற்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 25, 26-ம் தேதி நடைபெறும். 26-ம் தேதியுடன் ஒட்டு மொத்த கலந்தாய்வு பணிகள் முடிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT