Published : 19 Aug 2025 06:19 AM
Last Updated : 19 Aug 2025 06:19 AM

தொலைதூரக் கல்வி படிப்புகளில் ஆக.31 வரை மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

சென்னை: மத்​திய அரசின் இந்​திரா காந்தி தேசிய திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தின் (இக்னோ), சென்னை மண்டல முது​நிலை இயக்​குநர் கே.பன்​னீர்​செல்​வம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: இக்னோ தொலை​தூரக் கல்வி திட்​டம் வாயி​லாக பல்​வேறு பாடப் பிரிவு​களில் இளங்​கலை, முதுகலை, டிப்​ளமோ மற்​றும் சான்​றிதழ் படிப்​பு​களை வழங்கி வரு​கிறது. இந்த ஆண்​டுக்​கான ஜூலை பருவ மாணவர் சேர்க்கை முடிந்த நிலை​யில், மர்​ணவர்​களின் நலனை கருத்​தில் கொண்டு கடைசி தேதி ஆக. 31 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, சான்​றிதழ் படிப்​பு​கள் நீங்​கலாக, மற்ற அனைத்து வகை இளங்​கலை, முதுகலை, டிப்​ளமா படிப்​பு​களில் மாணவர்​கள் ஆகஸ்ட் 31 வரை சேரலாம். https://ignouadmission.samarth.edu.in என்ற இணை​யதள இணைப்பை பயன்​படுத்தி விண்​ணப்​பிக்க வேண்​டும். மாணவர் சேர்க்கை தொடர்​பான கூடு​தல் விவரங்​களை பல்​கலைக் கழகத்​தின் இணை​யதளத்​தில் (www.ignou.ac.in) அறிந்து கொள்​ளளாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x