Published : 18 Aug 2025 05:40 AM
Last Updated : 18 Aug 2025 05:40 AM

சென்னை திருவல்லிக்கேணியில் சாரணர் இயக்கத்துக்கு நவீன வசதியுடன் தலைமை அலுவலகம்: பள்ளிக்கல்வித் துறை

சென்னை: சென்னை திரு​வல்​லிக்​கேணி​யில் தமிழ்​நாடு சாரணர் இயக்​கத்​துக்கு புதிய தலைமை அலு​வல​கம் நவீன வசதி​களோடு ரூ.8.94 கோடி​யில் அமைக்​கப்​படு​கிறது.

இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் வெளி​யிட்ட அரசாணை விவரம்: பள்ளி மாணவர்​களை அதிக அளவில் சாரணர் இயக்​கத்​தில் சேர்க்​கும் வகை​யில் மேலும் பல ஆசிரியர்​களுக்கு பயிற்சி அளிக்க ஏது​வாக, தமிழ்​நாடு சாரணர் இயக்கத்துக்கு புதிய தலைமை அலு​வல​கம் நவீன வசதி​களு​டன் ரூ.10 கோடி​யில் அமைக்​கப்​படும் என முதல்​வர் ஸ்டா​லின் கடந்த பிப். 2-ம் தேதி அறி​வித்​தார்.

அதன்​படி, சென்னை திரு​வல்​லிக்​கேணி​யில் உள்ள பாரத சாரணர் இயக்க தலைமை வளாகத்​தில் நவீன பயிற்சி வசதி​களோடு, புதிய தலைமை அலு​வலக கட்​டிடம் கட்ட நிர்​வாக அனு​மதி அளித்து அரசு ஆணை​யிட்​டுள்​ளது. இதற்​கான அரசாணை​யும் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

தரை மற்​றும் 3 தளங்​களு​டன் இந்த கட்​டிடம் கட்​டப்பட உள்​ளது. தரைத் தளத்​தில் வாகன நிறுத்​து​மிடம், உபகரணங்​கள் வைக்​கும் அறை, பாது​காவலர் அறை, பொது கழிப்பறை​யும், முதல் தளத்​தில் 7 விருந்​தினர்​கள் அறை, 2 முக்​கிய விருந்​தினர்​கள் அறை, 2 சிறப்பு அறை​கள், சேமிப்பு அறை​யும் அமைக்​கப்​படும்.

2-வது தளத்​தில் நிர்​வாக அலு​வல​கம், பதிவேடு அறை, மாநில செய​லா​ளர் அறை, ஓய்​வறை, கழி​ப்பறை​யும், 3-வது தளத்​தில் மாநாட்டுக் கூடம், முக்​கிய நபர்​களுக்​கான ஓய்​வறை, மாநில தலைமை ஆணை​யர் அறை, சாரணர்​களை வழிப்​படுத்​தும் அறையும் அமைக்​கப்​படும். இதற்​காக ரூ.8 கோடியே 93 லட்​சத்து 81,199 செல​விடப்பட உள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x