Published : 17 Aug 2025 12:33 AM
Last Updated : 17 Aug 2025 12:33 AM
சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு https:tnmedicalselection.net என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில், கடந்த ஜூலை 30-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இன்று இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இறுதி பட்டியல் நாளை (ஆக.18) வெளியிடப்படவுள்ளது. கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு பெற்றதற்கான ஆணையை நாளை முதல்24-ம் தேதி நண்பகல் 12 மணி வரை மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வு முடிவுகள் நாளை அறிவிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT