Published : 14 Aug 2025 06:07 AM
Last Updated : 14 Aug 2025 06:07 AM

10-ம் வகுப்பு துணைத் தேர்வு விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: கடந்த ஜூலை மாதம் நடை​பெற்ற எஸ்​எஸ்​எல்சி துணைத் தேர்​வின் விடைத்​தாள் நகல் கோரி விண்​ணப்​பித்த மாணவர்கள் அந்​நகலை இன்று (வி​யாழக்​கிழமை) பிற்​பகல் முதல் ஆன்​லைனில் பதி​விறக்​கம் செய்​ய​லாம் என அரசு தேர்​வுத்​துறை அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக அரசு தேர்​வு​கள் இயக்​குநர் ந.லதா நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: 10-ம் வகுப்பு துணை தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்​தது. அத்​தேர்​வெழுதி விடைத்​தாள் நகல் கோரி விண்​ணப்​பித்த மாணவர்​கள் விடைத்​தாள் நகலை ஆகஸ்ட் 14 (இன்​று) பிற்​பகல் முதல் அரசு தேர்​வுத்​துறை​யின் இணை​யதளத்​தில் (www.dge.tn.gov.in) பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். அப்​போது, தங்​கள் பதிவெண் மற்​றும் பிறந்த தேதியை குறிப்​பிட வேண்​டும்.

மறுகூட்​டல் அல்​லது மறும​திப்​பீட்​டுக்கு விண்​ணப்​பிக்க விரும்​புவோர் அதற்கான விண்​ணப்​பத்தை மேற்​குறிப்​பிட்ட இணையதளத்தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். பூர்த்தி செய்த விண்​ணப் ​பத்​தின் இரு நகல்​கள் எடுத்து ஆகஸ்ட் 18 மற்​றும் 19-ம் தேதி சம்​பந்​தப்​பட்ட மாவட்ட அரசு தேர்​வு​கள் உதவி இயக்​குநர் அலு​வல​கத்​தில் அலு​வலக நேரத்​தில் சமர்ப்​பிக்க வேண்​டும்​.

புதிய மாவட்டங்கள்: மறுகூட்​டல் மற்​றும் மறும​திப்​பீட்​டுக் கட்​ட​ணத்தை அங்கேயே பணமாக செலுத்த வேண்​டும். புதி​தாக தொடங்​கப்​பட்ட தென்​காசி, ராணிப்​பேட்​டை, திருப்​பத்​தூர், கள்​ளக்​குறிச்​சி, செங்​கல்​பட்​டு, மயி​லாடு​துறை ஆகிய மாவட்​டங்​களைச் சேர்ந்​த மாணவர்​கள் மறுகூட்டல் மற்​றும் மறும​திப்​பீட்டு விண்​ணப்​பத்தை சம்​பந்​தப்​பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலு​வலர் அலு​வல​கத்​தில் சமர்ப்​பித்து கட்​ட​ணத்​தை​யும் பணமாக அங்​கேயே செலுத்​தலாம்.
இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x