Published : 13 Aug 2025 04:55 AM
Last Updated : 13 Aug 2025 04:55 AM

பிஎட் மாணவர் சேர்க்கை: கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்யலாம் - அமைச்சர் தகவல்

சென்னை: பிஎட் மாணவர் சேர்க்​கை​யில் இணை​ய​வழி​யில் பங்​கேற்ற மாணவர்​கள் கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணையை இன்று (புதன்கிழமை) முதல் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம் என உயர்​கல்வி அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​துள்​ளார். பி.எட். மாணாக்கர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்து தேர்வு செய்த கல்லூரிகளில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இதுதொடர்​பாக அமைச்​சர் கோவி.செழியன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பிஎட் மாணவர் சேர்க்​கை​யில் அரசு ஒதுக்​கீட்டு இடங்​களுக்கு இந்​தஆண்டு முதல்​முறை​யாக இணை​ய​வழி கலந்​தாய்வு அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. அதன்​படி அரசு மற்​றும் அரசு உதவி பெறும் கல்​வி​யியல் கல்​லூரி​களில் பிஎட் படிப்​பில் உள்ள 2,040 இடங்​களுக்​கான இணை​ய​வழி கலந்​தாய்வு ஆகஸ்ட் 4 முதல் 9-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டது.

அதில் பங்​கேற்ற மாணவ, மாணவி​கள் தங்​களுக்​கான விருப்​ப​மான கல்​லூரியை தேர்​வுசெய்​தனர். அவர்​களுக்​கான கல்​லூரி ஒதுக்கீட்டு ஆணை ஆகஸ்ட் 13-ம் தேதி (இன்​று) ஆன்​லைனில் வழங்​கப்​படும்.

மாணவர்​கள் ஒதுக்​கீட்டு ஆணையை www.lwiase.ac.in என்ற இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். தங்​களுக்கு ஒதுக்கப்​பட்ட கல்​லூரி​யில் அசல் சான்​றிதழ்​களை சமர்ப்​பித்து ஆகஸ்ட் 14 முதல் 19-ம் தேதி வரை சேர்ந்​து​கொள்​ளலாம். அனைத்து அரசு மற்​றும் அரசு உதவி பெறும் கல்​வி​யியல் கல்​லூரி​களி​லும் முதல் ஆண்டு பிஎட் வகுப்பு ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்​கும். இவ்வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x