Published : 11 Aug 2025 05:18 AM
Last Updated : 11 Aug 2025 05:18 AM

பொறியியல் கலந்தாய்வு 3-வது சுற்றில் 64,629 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு

சென்னை: பொறி​யியல் படிப்​பு​களுக்​கான சேர்க்கை கலந்​தாய்​வின் 3-வது சுற்​றில் 64,629 மாணவர்​களுக்கு தற்​காலிக​மாக இடங்கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளன. தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் இயங்​கும் 423 பொறி​யியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்​பு​களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வருகிறது. முதல் 2 சுற்று கலந்​தாய்வு முடி​வில் 92,423 இடங்​கள் நிரம்​பி​யுள்​ளன.

மீதமுள்ள 92,605 இடங்​களுக்​கான 3-ம் சுற்று கலந்​தாய்வு ஆக. 7-ம் தேதி தொடங்​கியது. அதில் கலந்​தாய்​வில் பங்​கேற்​று, தங்​களுக்கு பிடித்​த​மான கல்​லூரி​களை தேர்வு செய்த 62,533 மாணவர்​களுக்கு தற்​காலிக​மாக இடங்​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன. அரசுப் பள்ளி மாணவருக்​கான 7.5 சதவீத இடஒதுக்​கீட்​டில் 2,096 பேருக்கு தற்​காலிக ஒதுக்​கீடு வழங்​கப்​பட்​டுள்​ளது. தற்​காலிக ஒதுக்​கீடு ஆணை பெற்​றவர்​கள் அதை இன்று மாலை 5 மணிக்​குள் கட்​டா​யம் உறு​தி​செய்ய வேண்​டும். அப்​போது​தான் இறுதி ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​படும்.

இறுதி ஒதுக்​கீட்டு ஆணை நாளை (ஆக.12) காலை 10 மணிக்கு வெளி​யிடப்​படும். அதை மாணவர்​கள் பதி​விறக்​கம் செய்து ஆக. 17-ம் தேதிக்​குள் அந்​தந்த கல்​லூரி​களில் சேர வேண்​டும். ‘அப்​வேர்​டு’ (upward) அளித்த மாணவர்​களுக்கு ஆக. 20-ம் தேதி ஒதுக்​கீடு ஆணை வழங்​கப்​படும். அன்​றுடன் பொது கலந்​தாய்வு நிறைவு பெறுகிறது. இதுதொடர்​பான கூடு​தல் விவரங்​களை https://www.tneaonline.org எனும் தளத்​தில் அறியலாம்.

இதற்​கிடையே, பொறி​யியல் படிப்​பு​களுக்​கான சிறப்பு மற்​றும் பொதுப் பிரிவு கலந்​தாய்வு இறு​தி​கட்​டத்தை எட்​டிய நிலை​யில், மொத்​தம் உள்ள 1.87 லட்​சம் இடங்​களில் சுமார் 1.58 லட்​சம் இடங்​கள் நிரம்​பி​யுள்​ளன. சுமார் 29 ஆயிரம் இடங்​கள் காலி​யாக உள்​ளன. துணை கலந்​தாய்வு மூலம் இந்த இடங்​கள் நிரப்பப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x