Published : 11 Aug 2025 12:40 AM
Last Updated : 11 Aug 2025 12:40 AM

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஆக.14 வரை அவகாசம்

சென்னை: சித்​தா, ஆயுர்​வே​தம், யுனானி மற்​றும் ஹோமியோபதி மருத்​துவ பட்​டப் படிப்​பு​களுக்கு விண்​ணப்​பிக்க கால அவகாசம் நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​திய மருத்​து​வம் மற்​றும் ஹோமியோபதி துறை​யின் கீழ், சென்னை அரும்​பாக்​கம் அறிஞர் அண்ணா அரசு இந்​திய மருத்​து​வ​மனை வளாகத்​தில் சித்த மருத்​து​வக் கல்​லூரி, யுனானி மருத்​து​வக் கல்​லூரி செயல்​படு​கின்​றன. அதே​போன்​று, நெல்லை மாவட்​டம் பாளை​யங்​கோட்​டை​யில் சித்த மருத்​து​வக் கல்​லூரி, மதுரை மாவட்​டம் திரு​மங்​கலத்​தில் ஹோமியோபதி மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் கன்​னி​யாகுமரி மாவட்​டம் நாகர்​கோ​வில் அருகே கோட்​டாறில் ஆயுர்​வேத மருத்​து​வக் கல்​லூரி உள்​ளன.

இந்த 5 அரசு கல்​லூரி​களில் உள்ள 320 இடங்​களில், அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு 48 இடங்​கள் ஒதுக்​கப்​படு​கின்​றன. மீத​முள்ள 272 இடங்​கள் மாநில அரசுக்கு உள்​ளது. இதைத் தவிர, 29 தனி​யார் கல்​லூரி​களில் 1,920 இடங்​கள் உள்​ளன. அதில், 15 சதவீதம் அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு வழங்​கப்​படு​கிறது. மீத​முள்ள இடங்​களில், 65 சதவீதம் மாநில அரசுக்​கும், 35 சதவீதம் நிர்​வாக ஒதுக்​கீட்​டுக்​கும் உள்​ளன.

அரசு ஒதுக்​கீடு இடங்​கள், நிர்​வாக ஒதுக்​கீடு இடங்​கள் மற்​றும் தனி​யார் கல்​லூரி​களின் அகில இந்​திய ஒதுக்​கீடு இடங்​களுக்கு மாநில அரசு கலந்​தாய்வு நடத்தி வரு​கிறது. அரசு கல்​லூரி​களின் 15 சதவீத இடங்​களுக்கு மட்​டும் மத்​திய அரசு கலந்​தாய்வு நடத்​துகிறது. இந்​நிலை​யில், சித்​தா, ஆயுர்​வேதம், யுனானி, ஹோமியோபதி பிஎஸ்​எம்​எஸ், பிஏஎம்​எஸ், பியுஎம்​எஸ், பிஹெச்​எம்​எஸ் பட்​டப் படிப்​பு​களுக்​கான நிகழாண்டு மாணவர் சேர்க்​கைக்கு www.tnhealth.tn.gov.in என்ற சுகா​தா​ரத் ​துறை இணை​யதளத்​தில் விண்​ணப்ப பதிவு கடந்தஜூலை 24-ம் தேதி தொடங்​கியது. விண்​ணப்ப அவகாசம் வரும் 14-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ள​து.

இணை​யதளம் வாயி​லாக பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பத்தை பதி​விறக்​கம் செய்​து, அனைத்து சான்​றிதழ்​களி​லும் சுய சான்​றொப்​பமிட்டு அதன் நகல்​களை ஆக. 14-ம் தேதி மாலை 5 மணிக்​குள் ‘செய​லா​ளர், தேர்​வுக்​குழு, இந்​திய மருத்​து​வம் மற்​றும் ஹோமியோபதி துறை இயக்​ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்​திய மருத்​து​வ​மனை வளாகம், அரும்​பாக்​கம், சென்னை - 600106’ என்ற முகவரி​யில் சமர்ப்​பிக்க வேண்​டும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x