Published : 07 Aug 2025 06:35 AM
Last Updated : 07 Aug 2025 06:35 AM

தமிழ் மரபு குறித்து எடுத்துரைக்கும் விதமாக கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி: ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

சென்னை: தமிழ் மரபு குறித்து மாணவர்​களுக்கு எடுத்​துரைக்​கும் வித​மாக, 10 கல்​லூரி​களைச் சேர்ந்த மாணவர்​கள் பங்​கேற்ற ‘தமிழ்க் கனவு’ பண்​பாட்​டுப் பரப்​புரை நிகழ்ச்​சி, சென்னை மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தலை​மை​யில் நடை​பெற்​றது.

முன்​னாள் முதல்​வர் அண்​ணா​வின் நினை​வு​நாளை​யொட்டி தமிழ் இணை​யக் கல்வி கழகம் மற்​றும் உயர்​கல்​வித் துறை சார்​பில் தமிழகம் முழு​வதும் 200 இடங்​களில் 2 ஆயிரம் கல்​லூரி​களைச் சேர்ந்த 2 லட்​சம் மாணவர்​கள் பயனடை​யும் வகை​யில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ பரப்​புரை நிகழ்ச்சி கடந்த 2023, பிப்​.3-ம் தேதி தொடங்​கப்​பட்​டது.

கல்​லூரி மாணவர்​களிடையே தமிழ் மரபு, பண்​பாடு, தமிழர் தொன்​மை, மொழி முதன்​மை, சமத்​துவ வளர்ச்​சி, சமூகப் பொருளாதார முன்​னேற்​றம் குறித்த புரிதலை ஏற்​படுத்​தும் வகை​யில் இந்​நிகழ்ச்சி நடத்​தப்​பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்​சி​யாக சென்னை ராயப்​பேட்டை புதுக்​கல்​லூரி​யில், ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. சென்னை மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தலை​மை​யில் நடை​பெற்ற இந்​நிகழ்​வில், 10 கல்​லூரி​களைச் சேர்ந்த 1,000மாணவ, மாண​வியர் பங்​கேற்றனர்.

புத்​தகக் காட்​சி, ‘நான் முதல்​வன்’, வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சி, மாவட்ட தொழில் மையம், தாட்​கோ, வங்​கிக் கடனுதவி ஆலோசனை, மகளிர் சுயஉதவிக் குழு​வினரின் தயாரிப்​பு​கள் உள்​ளிட்ட அரங்​கு​களும் இதில் இடம்​பெற்​றிருந்​தன. தமிழ், தமிழரின் தொன்​மை, சமூக சமத்​து​வம், பொருளா​தார மேம்​பாடு குறித்து கல்​லூரி மாணவர்​களிடையே விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில் பேசிய மாணவ, மாணவி​களுக்கு பரிசுகளை​யும், பாராட்​டுச் சான்​றிதழ்​களை​யும் ஆட்​சி​யர் வழங்கி சிறப்​பித்​தார்.

மாவட்ட வரு​வாய் அலு​வலர் சு.கீ​தா, புதுக்​கல்​லூரி முதல்​வர் அஸ்​ரார் செஷிப், மாநிலக் கல்​லூரி முதல்​வர் ராமன், ராணிமேரி கல்லூரி முதல்​வர் உமாமகேஸ்​வரி உள்​ளிட்​டோர்​ இந்​நிகழ்​வில்​ பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x