Published : 07 Aug 2025 05:00 AM
Last Updated : 07 Aug 2025 05:00 AM

பொறியியல் மாணவர் சேர்க்கை; இன்று 3-வது சுற்று கலந்தாய்வு: தொழில்நிறுவன ஒதுக்கீடு அதிகரிப்பு

சென்னை: நடப்பு கல்வி ஆண்​டில் பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்​கைக்​கான (அரசு ஒதுக்​கீட்டு இடங்​கள்) இணை​ய​வழி கலந்​தாய்வு 3 சுற்​றுகளாக நடத்​தப்​படு​கிறது. இது​வரை நடை​பெற்ற இரண்டு சுற்​றுகள் மூலம் 91,365 மாணவர்​களுக்கு கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், 3-வது சுற்று கலந்​தாய்வு இன்று (வி​யாழன்) காலை 10 மணிக்​குத் தொடங்​கு​கிறது.

கட்​-ஆஃப் மதிப்​பெண் 143 முதல் 77.5 வரை பெற்​றுள்ள மாணவர்​கள் இக்​கலந்​தாய்​வில் பங்​கேற்​கின்​றனர். அவர்​கள் 9-ம் தேதி மாலை 5 மணிக்​குள் தங்​களுக்கு பிடித்​த​மான கல்​லூரி​களைத் தேர்வு செய்ய வேண்​டும். அவர்​களுக்கு 10-ம் தேதி காலை 10 மணிக்​குள் தற்காலிக ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​படும். அதை 11-ம் தேதி மாலை 5 மணிக்​குள் உறு​திப்​படுத்த வேண்​டும்.

அதையடுத்​து, 12-ம் தேதி காலை 10 மணிக்​குள் அவர்​களுக்​கான இறுதி கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​படும். மாணவர்​கள் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட கல்​லூரி​யில் 17-ம் தேதி மாலை 5 மணிக்​குள் சேர்ந்​து​விட வேண்​டும்.

அண்ணா பல்​கலைக்​கழக துறை​சார் கல்​லூரி​களான கிண்டி பொறி​யியல் கல்​லூரி​யில் உள்ள 1,110 இடங்​கள், எம்​ஐடி​யில் 750 இடங்கள், அழகப்பா தொழில்​ நுட்​பக் கல்​லூரி​யில் 550 இடங்​கள், கட்​டிக்​கலை கல்​லூரி​யில் 120 இடங்​கள் உள்ள நிலை​யில் தொழில் நிறு​வனங்​களுக்​கான ஒதுக்​கீடு இந்த ஆண்டு 5 சதவீதத்​தில் இருந்து 10 சதவீத​மாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x