Published : 04 Aug 2025 01:14 AM
Last Updated : 04 Aug 2025 01:14 AM

டிஎன்பிஎஸ்சி மூலம் 1,850 உதவியாளர் தேர்வுக்கு மின் வாரியம் ஒப்புதல்

சென்னை: டிஎன்​பிஎஸ்சி மூல​மாக, 400 உதவி பொறி​யாளர்​கள், 1,850 கள உதவி​யாளர்​களை தேர்வு செய்ய மின் வாரி​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

மின் வாரி​யத்​தில் உதவி பொறி​யாளர், கள உதவி​யாளர், கேங்​மேன், லைன்​மேன் போன்ற பணி​யிடங்​களை உடனடி​யாக நிரப்ப வேண்​டும் என தொழிற்சங்கங்கள் வலி​யுறுத்​துகின்​றன.

மின் வாரிய பணி​யாளர்​கள் வாரி​யத்​தின் வாயி​லாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட நிலை​யில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் மூல​மாக தேர்வு செய்​யப்​படு​கின்​றனர்.

இந்​நிலை​யில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் உதவிப் பொறி​யாளர் உட்பட ஒரு சில பணி​யிடங்​களை நிரப்ப டிஎன்​பிஎஸ்சி மூலம் தேர்​வு​கள் நடை​பெற்று வரு​கிறது. கடந்த ஆண்டு நடை​பெற்ற தேர்​வில் தேர்ச்சி பெற்ற 258 உதவி பொறியாளர்​கள் விரை​வில் பணி​யில் சேர்க்​கப்பட உள்​ளனர்.

இந்​நிலை​யில். தற்​போது 400 உதவி பொறி​யாளர்​கள் மற்​றும் 1850 கள உதவி​யாளர்​களை டிஎன்​பிஎஸ்சி மூல​மாக தேர்வு செய்ய மின் வாரி​யம் ஒப்​புதல் ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளது. டிஎன்​பிஎஸ்​சி​யின் ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப சேவை​கள் தேர்​வு​கள் மூல​மாக இந்த பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட​வுள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x