Published : 31 Jul 2025 01:36 AM
Last Updated : 31 Jul 2025 01:36 AM
சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த ஆசிரியர்கள் அதில் திருத்தம் மேற்கொள்ளலாம் என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (என்எஸ்எஸ்) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழக அரசால் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு அனைத்து வகை பள்ளிகளையும் சேர்ந்த ஆசிரியர்கள் ‘எமிஸ்’ இணையதளம் வாயிலாக ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டது.
இந்த ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுதலாக உள்ளீடு செய்து சமர்ப்பித்துவிட்டால் அதை சரிசெய்யும் வகையில் திருத்தம் மேற்கொள்ள ஜூலை 29-ம் தேதி முதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆசிரியர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம்.
ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு பிறகு, ஆன்லைன் விண்ணப்பங்கள் மாவட்ட தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் அதன்பிறகு விண்ணப்பத்தில் எவ்விதமான திருத்தமும் மேற்கொள்ள முடியாது என்பதை ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT