Published : 30 Jul 2025 06:51 AM
Last Updated : 30 Jul 2025 06:51 AM

பொறியியல் மாணவர் சேர்க்கை: துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்​கான துணை கலந்​தாய்​வுக்கு ஆகஸ்ட் 12-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம்.

இது தொடர்​பாக தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககம் சார்​பில் தமிழ்​நாடு பொறி​யியல் மாணவர் சேர்க்கை செய​லா​ளர் புருஷோத்​தமன் நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: நடப்பு கல்​வி​யாண்​டில் (2025-26) பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்​கான பொது கலந்​தாய்​வில் நிரப்​பப்​ப​டாத இடங்​களுக்கு துணை கலந்​தாய்வு நடத்​தப்பட உள்​ளது. இதில் பிளஸ்-2 துணைத்தேர்​வில் தேர்ச்சி பெற்ற மாணவர்​கள் மற்​றும் பொது கலந்​தாய்​வில் கலந்​து​கொள்ள இயலாத மாணவர்​கள் பங்​கேற்​கலாம்.

https://www.tneaonline.org அல்​லது https://www.dte.tn.gov.in ஆகிய இணை​யதள முகவரி​களை பயன்​படுத்தி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை ஆன்லைனில் விண்​ணப்​பிக்கலாம் மாணவர்​கள் வசதிக்​காக அனைத்து மாவட்​டங்​களிலும் தமிழ்​நாடு பொறி​யியல் சேர்க்கை சேவை மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அந்த மையங்​களின் விவரங்​களை இணை​யதளத்​தில் அறிந்து​கொள்​ளலாம்.
இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x