Published : 28 Jul 2025 06:12 AM
Last Updated : 28 Jul 2025 06:12 AM

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் அழைப்பு

சென்னை: டிஎன்​பிஎஸ்சி தேர்வு எழுதும் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான இலவச பயிற்சி வகுப்​பு​கள் சென்​னை​யில் நடை​பெற்று வருவ​தாக​வும், தகு​தி​யுள்ள மாற்​றுத்திற​னாளி​கள் வகுப்​பு​களில் பங்​கேற்று பயனடை​யு​மாறும் மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே அழைப்பு விடுத்​துள்​ளார்.

தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) சார்​பில் அனைத்து வகை மாற்​றுத் திற​னாளி மாணவர்​களுக்கு நடத்தப்​படும் குரூப்​-2, 2ஏ தேர்​வுக்​கான இலவச பயிற்சி வகுப்​பு​கள், மாற்​றுத் திற​னாளி​களுக்​கான சிறப்பு வேலை​வாய்ப்பு மற்​றும் தொழில்​நெறி வழி​காட்​டும் மையத்​தின் மூலம் கடந்த 21-ம் தேதி​முதல் தொடங்கி நடை​பெற்று வரு​கிறது.

சென்னை மயி​லாப்​பூரில் உள்ள சிஎஸ்ஐ காது கேளாதோர் மேல்​நிலைப் பள்​ளி​யில் திங்​கள் முதல் வெள்​ளிக்​கிழமை வரை காலை 10 முதல் மதி​யம் 1 மணிவரை பயிற்சி வழங்​கப்​படு​கிறது. டிஎன்​பிஎஸ்சி குரூப்​-2, 2ஏ தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க வேண்​டிய கடைசி நாள் ஆக. 13-ம் தேதி​யாகும்.

பட்​டப்​படிப்பு முடித்​தவர்​கள் விண்​ணப்​பிக்​கலாம். அந்த வகை​யில் சென்​னையை சேர்ந்த தகு​தி​வாய்ந்த அனைத்து வகை மாற்றுத்திற​னாளி மாணவ, மாணவி​கள் இணைய வழி​யில் தேர்​வுக்கு விண்​ணப்​பித்த விண்​ணப்​பப்​படிவ நகலுடன், ஆதார் அட்டை நகல், புகைப்​படம் ஆகிய​வற்​றுடன் பயிற்​சி​யில் பங்​கேற்று பயனடைய​லாம் என மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார். பயிற்​சிக்கு கட்​ட​ணமில்​லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x