Published : 18 Jul 2025 06:02 AM
Last Updated : 18 Jul 2025 06:02 AM

தொலை​தூர கல்வி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்​டிப்பு: இக்னோ பல்​கலைக்​கழகம் அறி​விப்பு

சென்னை: தொலை​தூரக் கல்வி ஜூலை பருவ மாணவர் சேர்க்​கைக்கு விண்​ணப்​பிக்​கும் கால அவகாசம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்​கப்​பட்​டுள்​ள​தாக இக்னோ பல்​கலைக்​கழகம் அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்​து, இந்​திரா காந்தி தேசிய திறந்​தநிலை பல்​கலைக் கழகத்​தின் (இக்​னோ) சென்னை மண்டல முது​நிலை இயக்​குநர் கே.பன்​னீர்​செல்​வம் நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: மத்​திய அரசின் பல்​கலைக்​கழக​மான இக்னோ தொலை​தூரக் கல்வி திட்டம் வாயி​லாக பல்​வேறு பாடப்​பிரிவு​களில் சான்​றிதழ், டிப்​ள​மா, இளநிலை, முது​நிலை படிப்​பு​களை வழங்கி வரு​கிறது. தற்​போது, மாணவர்​களின் நலனை கருத்​தில்​கொண்டு ஜூலை பருவ சேர்க்​கைக்​கான கடைசி தேதி இந்த மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, தொலை​தூரக்​கல்​வி​யில் சேர விரும்​பும் மாணவர்​கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணை​யதளம் வழி​யாக விண்ணப்பிக்க வேண்​டும். இக்​னோ​வில் பிஇ, பிகாம், பிஎஸ்சி படிப்​பு​களில் சேரும் எஸ்​சி, எஸ்டி மாணவர்​களுக்கு கல்விக் கட்​ட​ணத்​தில் விலக்கு அளிக்​கப்​படு​கிறது. மாணவர் சேர்க்கை தொடர்​பான விவரங்​களை பல்​கலைக் கழகத்​தின் இணை​யதளத்​தில் (www.ignou.ac.in) அறிந்து கொள்​ளலாம்.

மேலும், சென்னை வேப்​பேரி பெரி​யார் திடலில் இயங்கி வரும் மண்டல அலு​வல​கத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்​ணிலும் தொடர்பு கொள்​ளலாம். இக்​னோ​வின் ஆன்​லைன் படிப்​பு​களில் சேர விரும்​பும் மாணவர்​கள் https://ignouiop.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்​படுத்தி விண்​ணப்​பிக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x