Published : 16 Jul 2025 12:23 AM
Last Updated : 16 Jul 2025 12:23 AM

முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்

சென்னை: உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு:

நடப்பு கல்வி ஆண்​டில் அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் முதுகலை படிப்பு சேர்க்​கைக்​கான ஆன்​லைன் விண்​ணப்​பப் பதிவுக்கான காலஅவ​காசம் ஜூலை 15-ம் தேதியுடன் (நேற்​று) முடிவடைந்​த​து. முதல்​வரின் அறி​வுறுத்​தலின் பேரில், மாணவர்​களின் நலன் கருதி கடைசி நாள் ஜூலை 31 வரை நீட்​டிக்​கப்​படு​கிறது.

இதைத்​தொடர்ந்​து, மாணவர்​களின் தரவரிசைப் பட்​டியல் ஆகஸ்ட் 4-ம் தேதி கல்​லூரி​களுக்கு அனுப்​பப்​படும். அதன்​பிறகு, சிறப்பு ஒதுக்​கீடு மாணவர்​களுக்​கான கலந்​தாய்வு ஆகஸ்ட் 11-ம் தேதி நடை​பெறும். பொது கலந்​தாய்வு ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்​கும். கலந்​தாய்வு மற்​றும் சேர்க்கை பணி​கள் முடிவடைந்து முதலாம் ஆண்டு முதுகலை மாணவர்​களுக்​கான வகுப்பு ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்​கும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுஉள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x