Published : 11 Jul 2025 12:42 AM
Last Updated : 11 Jul 2025 12:42 AM

இடைநிலை ஆசிரியர்கள் 2,342 பேர் பணி நியமனம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: அரசுப் பள்​ளி​களில் 2,342 இடைநிலை ஆசிரியர்​கள் பணிநியமனத்​துக்​கான வழி​காட்டு நெறி​முறை​களை பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: அரசுப் பள்​ளி​களில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணி​யிடங்​களுக்கு ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) மூலம் நடத்​தப்​பட்ட போட்​டித் தேர்​வில் தகுதி பெற்று மதிப்​பெண்​கள் மற்​றும் இனச்​சுழற்சி அடிப்​படை​யில் தேர்வு செய்​யப்​பட்ட 2,342 பேர் கொண்ட தேர்​வுப் பட்​டியல் பெறப்​பட்​டுள்​ளது.

இவர்​களுக்​கான நேரடி பணி நியமன கலந்​தாய்வு சென்​னை​யில் நடத்​தப்​பட்டு ஆணை வழங்​கப்​பட​வுள்​ளது. அத்​துடன் தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​களின் வீட்டு முகவரி​யுடன்​கூடிய பெயர்ப் பட்​டியல் அனைத்து மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்பி வைக்​கப்​பட்​டது. அதன் பொருட்டு இடைநிலை ஆசிரியர் பணி​யிடத்​துக்கு தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு ஜூலை 14 முதல் 18-ம் தேதி வரை சென்னை சேத்​துப்​பட்டு எம்​சிசி பள்​ளி, கீழ்ப்​பாக்​கம் சிஎஸ்ஐ பெயின்ஸ் மெட்​ரி​குலேஷன் பள்ளி ஆகிய இரு பள்​ளி​களில் நேரடி முறை​யில் இட ஒதுக்​கீட்​டுக்​கான கலந்​தாய்வு நடை​பெறவுள்​ளது.

முதல்வர் வழங்குவார்: னவே, ஆசிரியர் பணி​யிடங்​களுக்கு தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​கள் முன்​னுரிமைப் பட்​டியல் வரிசைப்​படி கலந்​தாய்வு நடை​பெறும் நேரத்​துக்கு முன்​பாகவே மையத்​துக்கு வரு​கை புரிய வேண்​டும். தாமத​மாக வருபவருக்கு அந்த நேரத்​தில் உள்ள காலிப்​பணி​யிடங்​களுக்கு மட்​டுமே தேர்​வுசெய்து கொள்ள அனு​ம​திக்​கப்​படும். இதையடுத்து ,பணிநியமனம் பெறு​பவருக்கு முதல்​வர் ஸ்​டா​லின் நியமன ஆணை​களை வழங்​கு​வார். அந்த விழா சென்னை பெரியமேடு நேரு உள் விளை​யாட்டு அரங்​கில் ஜூலை 23-ம் தேதி நடை​பெறும். இவ்​வாறு தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநரகம் அனுப்பிய சுற்றறிக்கையில்​ கூறப்​பட்​டு உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x