Published : 11 Jul 2025 12:40 AM
Last Updated : 11 Jul 2025 12:40 AM

திறந்தநிலை பல்கலை. பேராசிரியர்கள் போராட்டம் தொடர்கிறது

சென்னை: தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழக பேராசிரியர்​கள் நடத்தி வரும் கால​வரையற்ற உள்​ளிருப்பு போராட்​டம் நேற்று 3-வது நாளாக நீடித்​தது.

தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தில் பணி​யாற்றி வரும் பேராசிரியர்​களை மாற்​றுப் பணி அடிப்​படை​யில், அரசு கல்​லூரி​களில் மாணவர்​களுக்கு வகுப்பு நடத்த பல்​கலைக்​கழக நிர்​வாகம் நடவடிக்கை எடுத்​தது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, 35-க்​கும் மேற்​பட்ட பேராசிரியர்​கள் பல்​கலைக்​கழக வளாகத்​தில் கால​வரையற்ற உள்​ளிருப்பு போராட்​டதை கடந்த செவ்​வாய்க்​கிழமை தொடங்​கினர். இந்​நிலை​யில், போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள பேராசிரியர்​களிடம் 3-வது நாளான நேற்று மதி​யம் துணைவேந்​தர் எஸ். ஆறு​முகம் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

மாற்​றுப் பணி முடிவை திரும்​பப் பெறு​வது தொடர்​பாக துணைவேந்​தர் எந்​த​வித​மான உறு​தி​யும் அளிக்​காத​தால் போராட்​டத்தை கைவிட பேராசிரியர்​கள் மறுத்​து​விட்​டனர். பல்​கலைக்​கழக நிர்​வாகம் தனது முடிவை திரும்​பப்பெறும் வரை, போராட்​டத்தை தொடரப் போவ​தாக பேராசிரியர்​கள்​ தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x