Published : 09 Jul 2025 12:33 AM
Last Updated : 09 Jul 2025 12:33 AM

பிஎட் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

சென்னை: அரசு கல்​வி​யியல் கல்​லூரி​களில் பிஎட் படிப்​பில் சேரு​வதற்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிப்​ப​தற்​கானகடைசி நாள் இன்றுடன் முடிவடைகிறது.

நடப்பு கல்வி ஆண்​டில் (2025-26) அரசு கல்​வி​யியல் கல்​லூரி​கள் மற்​றும் அரசு உதவி பெறும் கல்​லூரி​களில் (அரசு ஒதுக்​கீட்டு இடங்​கள்) பிஎட் படிப்​பில் சேரு​வதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்​கியது. தமிழ், ஆங்​கிலம், கணிதம், வேதி​யியல், தாவர​வியல், விலங்​கியல்,வரலாறு உள்​ளிட்ட பல்​வேறு பாடங்​களில் இளங்​கலை மற்​றும் முதுகலை பட்​டம் பெற்​றவர்​கள் விண்​ணப்​பித்து வரு​கின்​றனர்.

18-ம் தேதி தரவரிசை பட்டியல்: கல்​லூரி கல்வி இயக்​ககம் ஏற்​கெனவே அறி​வித்​துள்​ளபடி, பிஎட் படிப்​புக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிப்​ப​தற்​கான கடைசி நாள் இன்று (9-ம் தேதி) ஆகும். இதைத் தொடர்ந்​து, மாணவர்​களின் விண்​ணப்​பங்​கள் பரிசீலிக்​கப்​பட்​டு, தகு​தி​யான மாணவர்​களின் தரவரிசை பட்டியல் வரும் 18-ம் தேதி வெளி​யிடப்​படும்.

அதன் பிறகு, பிடித்​த​மான கல்​லூரியை தேர்வு செய்​வதற்​கான கலந்​தாய்வு வரும் 21 முதல் 25-ம் தேதி வரை நடை​பெறும். கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணை வரும் 28-ம் தேதி வழங்​கப்​படும். ஒதுக்​கீட்டு ஆணை பெற்ற மாணவர்​கள் சம்​பந்​தப்​பட்ட கல்​வி​யியல் கல்​லூரி​யில் ஜூலை 31 முதல் ஆக. 4-ம் தேதிக்​குள் சேர வேண்​டும். முதலா​மாண்டு மாணவர்​களுக்​கான வகுப்​பு​கள் ஆக. 6-ம் தேதி தொடங்​கும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x