Published : 07 Jul 2025 12:46 AM
Last Updated : 07 Jul 2025 12:46 AM

பொறியியல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது: சிறப்பு பிரிவில் 493 பேர் பங்கேற்கின்றனர்

சென்னை: இளநிலை பொறி​யியல் படிப்​பு​களுக்​கான சிறப்​புப் பிரிவு கலந்​தாய்வு இணைய வழி​யில் இன்று (ஜூலை 7) தொடங்குகிறது.

தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் இயங்​கும் 417 பொறி​யியல் கல்​லூரி​களில் இளநிலை படிப்​பு​களுக்கு நடப்​பாண்டில் 2 லட்​சத்து 41,641 மாணவர்​கள் கலந்​தாய்​வில் பங்​கேற்க தகு​திபெற்​றனர். இவர்​களுக்​கான தரவரிசை பட்​டியல் கடந்த ஜூன் 27-ம் தேதி வெளி​யானது. அதைத் தொடர்ந்து பொறி​யியல் படிப்​பு​களுக்​கான கலந்​தாய்வு இன்று (ஜூலை 7) தொடங்​கு​கிறது.

முதலில் மாற்​றுத்​திற​னாளி​கள், முன்​னாள் ராணுவ வீரர்​களின் குழந்​தைகள், விளை​யாட்​டுப் பிரிவு மாணவர்​கள் ஆகியோ​ருக்​கான சிறப்​புப் பிரிவு கலந்​தாய்வு நடை​பெற உள்​ளது. இதில் அரசுப் பள்​ளி​களில் படித்து 7.5 சதவீத ஒதுக்​கீட்​டில் விண்​ணப்​பித்​தவர்​களில் சிறப்​புப் பிரி​வில் வரும் மாணவர்​களுக்கு கலந்​தாய்வு இன்​றும், நாளை​யும் நடத்​தப்பட உள்​ளது. இதில் முன்​னாள் ராணுவத்​தினரின் வாரிசுகள் 9 பேரும், மாற்​றுத்​திற​னாளி​கள் பிரி​வில் 128 பேரும், விளை​யாட்டு பிரி​வில் 356 பேரும் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்.

ஜூலை 14 முதல் பொதுப்பிரிவு: மாணவர்​கள் இன்று காலை 10 முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்​களை தேர்வு செய்யவேண்​டும். இவர்​களுக்​கான தற்​காலிக ஒதுக்​கீட்டு ஆணை இரவு வெளி​யிடப்​படும். அதற்கு மறு​நாள் மாலை 5 மணிக்​குள் ஒப்​புதல் அளித்து மாணவர்​கள் உறுதி செய்ய வேண்​டும். அப்​போது​தான் இறுதி ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​படும். தொடர்ந்து இதர சிறப்​புப் பிரிவு மாணவர்​களுக்கு ஜூலை 9 முதல் 11-ம் தேதி வரை வரை கலந்​தாய்வு நடத்​தப்​படும்.

அதன்​பின், பொதுப் பிரிவு மாணவர்​களுக்​கான கலந்​தாய்வு ஜூலை 14-ல் தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி வரை 3 சுற்​றுகளாக நடத்​தப்பட உள்​ளது. அந்​தந்த பிரி​வில் வரும் மாணவர்​கள் தங்​களுக்​கான நாட்​களில் கலந்​தாய்​வில் பங்​கேற்று இடங்​களை தேர்வு செய்யவேண்​டும். இதற்​கான விரி​வான கால அட்​ட​வணை, கலந்​தாய்​வில் பங்​கேற்​கும் வழி​முறை​கள் உள்​ளிட்ட வழி​காட்​டு​தல்​கள் https://www.tneaonline.org/ எனும் வலை​தளத்தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. நடப்பு கல்​வி​யாண்​டில் பிஇ, பிடெக் ஆகிய படிப்​பு​களில் மொத்​தம் 2 லட்​சத்து 52,467 இடங்​களில் மாணவர்​களை சேர்க்க அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. இது முந்​தைய ஆண்​டை​விட 20 ஆயிரம் இடங்​கள்​ அதி​கம்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x