Published : 30 Jun 2025 12:19 AM
Last Updated : 30 Jun 2025 12:19 AM
சென்னை: இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கான நேரடி பணி நியமன கலந்தாய்வு ஜூலை 14 முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி துறை இயக்குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தொடக்க கல்வி துறையில் மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு (21 ஒன்றியங்களுக்கு மட்டும்) ஜூலை 2-ல் நடைபெறும். இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியம் கல்வி மாவட்டத்துக்குள் ஜூலை 3-ம் தேதியும், வருவாய் மாவட்டத்துக்குள் ஜூலை 4-ம் தேதியும் நடத்தப்படும்.
இடைநிலை ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 5-ல் தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறும். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 19, 21-ம் தேதிகளிலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22, 23-ம் தேதிகளிலும் நடத்தப்படும்.
மேலும், பட்டதாரி ஆசிரியருக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை 24 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும். இதுதவிர, இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வான நபர்களுக்கான நேரடி பணி நியமன கலந்தாய்வு ஜூலை 14 முதல் 18-ம் தேதி அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வு நடத்துவதற்கான மின் இணைப்பு, இணையதளம், இருக்கை வசதி உள்ளிட்டஅனைத்து முன்னேற்பாடுகளையும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT