Published : 06 Jun 2025 05:18 AM
Last Updated : 06 Jun 2025 05:18 AM

அரசு பழங்குடியினர் பள்ளியில் பயின்ற மாணவி ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று சாதனை!

​ராஜேஸ்வரி

சேலம்: அரசு பழங்​குடி​யினர் பள்​ளி​யில் பயின்ற மாணவி ஐஐடி-க்​கான நுழைவுத்​தேர்​வில் வெற்றி பெற்று சாதனை படைத்​துள்​ளார். சேலம் மாவட்​டம் கல்​வ​ராயன் மலை​யில் உள்ள கரு​மந்​துறை கிராமத்​தைச் சேர்ந்த ஆண்​டி-க​விதா தம்​ப​தி​யின் 3-வது மகள் ராஜேஸ்​வரி. பழங்​குடி​யினத்​தைச் சேர்ந்த இவர், அங்​குள்ள அரசு பழங்குடியின உறைவிட பள்​ளி​யில் பிளஸ்-2 பயின்​று, 600-க்கு 521 மதிப்​பெண் பெற்​றார். பின்​னர், ஆசிரியர்​கள் ஊக்​கு​வித்​த​தால், அரசு சார்​பில் பெருந்​துறை​யில் செயல்​படும் உயர்​கல்வி பயிற்சி மையத்​தில் ராஜேஸ்​வரி சேர்ந்​தார்.

மருத்​து​வ​ராக வேண்​டுமென்ற ஆசை​யுடன் இருந்த ராஜேஸ்​வரி நீட் தேர்​வுக்கு மட்​டுமின்​றி, ஐஐடி சேர்க்​கைக்​கான ஜேஇஇ தேர்​வுக்​கும் தயா​ரா​னார். ஜேஇஇ மெயின் தேர்​வில் வெற்றி பெற்​றதும், ஜேஇஇ அட்​வான்​ஸ்டு தேர்​வுக்கு முனைப்​புடன் பயின்​றார்.

இந்​நிலை​யில், அந்த தேர்​வில் வெற்றி பெற்​று, அகில இந்​திய அளவில் பழங்​குடி​யினருக்​கான பிரி​வில் 417-வது இடம் பெற்​றுள்​ளார். மேலும், தமிழக அளவில் பழங்​குடி​யின மாணவி​களில் முதலிடத்​தில் தேர்ச்சி பெற்​றுள்​ளார். தையல் கலைஞ​ராகப் பணி​யாற்​றிய ராஜேஸ்​வரி​யின் தந்தை ஆண்​டி, உடல்​நலக்​குறை​வால் 2 ஆண்​டு​களுக்கு முன்பு உயி​ரிழந்​து​விட்​டார். ராஜேஸ்​வரி​யின் தாய் கவி​தாவுக்கு 4 குழந்​தைகள் உள்​ளனர்.

ராஜேஸ்​வரி​யின் மூத்த சகோ​தரி ஜகதீஸ்​வரி பி.எஸ்​சி. வேதி​யியல், அண்​ணன் கணேஷ் பி.எஸ்​சி. கணிதம் பட்​டம் பெற்​றுள்​ளனர். தங்கை பரமேஸ்​வரி கரு​மந்​துறை பழங்​குடி​யினர் பள்​ளி​யில் பிளஸ்-1 படித்து வரு​கிறார். வறுமை​யில் இருந்​தா​லும், தந்​தை​யும், தாயும் ஊக்​கு​வித்​த​தால் குடும்​பத்​தில் அனை​வரும் நன்​றாகப் படித்​த​தாக ராஜேஸ்​வரி தெரி​வித்​துள்​ளார்.

முதல்​வர் ஸ்டா​லின் பாராட்டு: தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில், “தந்​தையை இழந்​தா​லும், அவரின் கனவை நெஞ்​சில் சுமந்​து, அதை நனவாக்​கி​யிருக்​கும் அரசு உறை​விடப் பள்ளி மாணவி ராஜேஸ்​வரி​யின் சாதனைக்​குப் பாராட்​டு​கள். அவரது உயர்​கல்​விச் செலவு மொத்​தத்​தை​யும் தமிழக அரசே ஏற்​கும். ராஜேஸ்​வரி போன்ற பலரும் சேரு​வது​தான் ஐஐடி-க்கு உண்​மை​யான பெரு​மை​யாக அமை​யும். அதற்​காக தி​ரா​விட​மாடல் அரசு தொடர்ந்து உழைக்​கும்” என்​று தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x