Published : 04 Jun 2025 06:12 AM
Last Updated : 04 Jun 2025 06:12 AM

அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை கணினி ஆசிரியர் பதவிக்கு புதிய கல்வித் தகுதி: பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிடு

சென்னை: அரசு மேல்​நிலைப் பள்ளி முதுகலை கணினி ஆசிரியர் பதவிக்கு (கணினி பயிற்​றுநர்) புதிய கல்​வித் தகு​தியை நிர்​ண​யித்து பள்​ளிக்​கல்​வித் துறை அரசணை வெளி​யிட்​டுள்​ளது.

இது தொடர்​பாக பள்​ளிக்கல்​விதுறை செயலர் பி.சந்​திரமோகன் வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மேல்​நிலைக்​கல்​வி​யில் கணினி பயிற்​றுநர் (கிரேடு-1) பதவி​யும், முதுகலைப் பட்​ட​தாரி ஆசிரியர் பதவி​யும் ஒன்​று​போல் இருப்​ப​தால், கணினி பயிற்​றுநர் (கிரேடு-1) பதவி தமிழ்​நாடு மேல்​நிலைக்​கல்வி பணி சிறப்பு விதி​யுடன் இணைக்​கப்​படு​கிறது.

இப்​ப​தவிக்​கான கல்​வித்​தகுதி பி்ன்​வரு​மாறு நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. கணினி பயிற்​றுநர் பதவிக்கு எம்​.எஸ்​சி. கம்ப்​யூட்​டர் சயின்ஸ் பட்​டப் படிப்​பும், பி.எட். பட்​ட​மும் பெற்​றிருக்க வேண்​டும். அல்​லது எம்​.எஸ்​சி. படிப்​புடன் ஒருங்​கிணைந்த பி.எஸ்​சி. பி.எட். அல்​லது பி.ஏ., பி.எட். பட்​டம் பெற்​றிருக்க வேண்​டும். மேலும், இளங்​கலை பட்​ட​மும், முதுகலை படிப்​பும் ஒரே பாடத்​தில் பெறப்​பட்​ட​தாக இருக்க வேண்​டும். இவ்​வாறு அந்த அரசாணை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

பழைய அரசாணை​யின்​படி, கம்ப்​யூட்​டர் சயின்​ஸ், கம்ப்​யூட்​டர் இன்​ஜினியரிங், இன்ஃபர்​மேஷன் டெக்​னாலஜி, சாஃப்ட்​வேர் டெக்​னாலஜி பாடங்​களில் எம்​.டெக். அல்​லது எம்​.இ. பட்​ட​மும், பி.எ.ட் பட்​ட​மும் பெற்​றவர்​களும் கணினி பயிற்​றுநர் பதவிக்​குத் தகு​தி​யானவர்​கள் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. ஆனால், தற்​போது வெளி​யிடப்​பட்ட புதிய அரசாணை​யின்​படி, எம்​.இ. எம்​.டெக்.பட்​ட​தா​ரி​கள் இந்​தப் பணிக்கு தகு​தி​யில்லை என்று கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x