Published : 17 May 2025 12:50 AM
Last Updated : 17 May 2025 12:50 AM

விடைத்தாள் நகல் பெற மே 20 முதல் விண்ணப்பிக்கலாம்

10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் பெற விரும்பும் மாணவர்கள் மே 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்; 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் வழியாகவும் மே 20 முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக அனைத்து பாடங்களுக்கும் தலா ரூ.275 செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றதும் மாணவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

இதுதவிர 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) மே 19-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமும் அவரவர் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். 10-ம் வகுப்புக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் அடுத்த ஜூன் மாதம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x