Published : 16 May 2025 07:11 PM
Last Updated : 16 May 2025 07:11 PM
சென்னை: “தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட10 நாட்களில் 1,69,634 மாணாக்கர்கள் பதிவு செய்துள்ளனர்,” என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியது: “கடந்த மே 7-ம் தேதி அன்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான இணையதள மற்றும் விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டது. இன்று (மே 16) மாலை 6 மணி நிலவரப்படி 1,69,634 மாணாக்கர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். இதில் 53,624 மாணவர்களும் 48,514 மாணவிகளும் ஆக மொத்தம் 1,02,138 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
மாணாக்கர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் தங்களது பொறியியற் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஜூன் 6-ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். மாணாக்கர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழகம் முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியற் மாணாக்கர் சேர்க்கை சேவை மையங்கள் (TFC Centres) நிறுவப்பட்டுள்ளன. அந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், 1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவோ அல்லது tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்,” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT