Published : 16 May 2025 05:07 AM
Last Updated : 16 May 2025 05:07 AM

டிப்ளமா நேரடி 2-ம் ஆண்டில் பிளஸ் 2 அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் சேரலாம்

கோப்புப் படம்

சென்னை: பிளஸ் 2-வில் வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் பாலிடெக்னிக் டிப்ளமா நேரடி 2-ம் ஆண்டில் சேர (லேட்ரல் என்ட்ரி) தொழில்நுட்பக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு கால பொறியியல் டிப்ளமா படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம்.

அதோடு லேட்ரல் என்ட்ரி முறையில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்க்கப்படுகிறார்கள். அவர்கள் பிளஸ் 2 வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை படித்திருக்க லேண்டும். அதேபோல், எஸ்எஸ்எல்சி முடித்துவிட்டு 2 ஆண்டுகள் ஐடிஐ படித்தவர்களம் லேட்ரல் என்ட்ரி முறையில் நேரடியாக 2-ம் ஆண்டு சேரலாம்.

இந்நிலையில், வணிகவியல் உள்பட எந்த பாடப்பிரிவு படித்திருந்தாலும் பாலிடெக்னிக் கல்லூரியில் லேட்ரல் என்ட்ரி முறையில் நேரடியாக 2-ம் ஆண்டு சேருவதற்கு தொழில்நுட்ப்ககல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக தொழில்நுட்ப்ககல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 தேர்வில் வணிகவியல் உட்பட அனைத்து பாடப்பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் 2025-2026-ம் கல்வி ஆண்டில் நேரடி 2-ம் ஆண்டு பட்டய படிப்பில் (டிப்ளமா) சேர்க்கை செய்துகொள்ள அனைத்து வகை பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x