Published : 16 May 2025 05:07 AM
Last Updated : 16 May 2025 05:07 AM
சென்னை: பிளஸ் 2-வில் வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் பாலிடெக்னிக் டிப்ளமா நேரடி 2-ம் ஆண்டில் சேர (லேட்ரல் என்ட்ரி) தொழில்நுட்பக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு கால பொறியியல் டிப்ளமா படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம்.
அதோடு லேட்ரல் என்ட்ரி முறையில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்க்கப்படுகிறார்கள். அவர்கள் பிளஸ் 2 வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை படித்திருக்க லேண்டும். அதேபோல், எஸ்எஸ்எல்சி முடித்துவிட்டு 2 ஆண்டுகள் ஐடிஐ படித்தவர்களம் லேட்ரல் என்ட்ரி முறையில் நேரடியாக 2-ம் ஆண்டு சேரலாம்.
இந்நிலையில், வணிகவியல் உள்பட எந்த பாடப்பிரிவு படித்திருந்தாலும் பாலிடெக்னிக் கல்லூரியில் லேட்ரல் என்ட்ரி முறையில் நேரடியாக 2-ம் ஆண்டு சேருவதற்கு தொழில்நுட்ப்ககல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக தொழில்நுட்ப்ககல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிளஸ் 2 தேர்வில் வணிகவியல் உட்பட அனைத்து பாடப்பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் 2025-2026-ம் கல்வி ஆண்டில் நேரடி 2-ம் ஆண்டு பட்டய படிப்பில் (டிப்ளமா) சேர்க்கை செய்துகொள்ள அனைத்து வகை பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT