Published : 13 May 2025 04:17 AM
Last Updated : 13 May 2025 04:17 AM
சென்னை: அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சிறப்பு சட்டக்கல்லூரியில் பிஏஎல்எல்பி (ஆனர்ஸ்), பிபிஏஎல்எல் (ஆனர்ஸ்) பிகாம்எல்எல்பி (ஆனர்ஸ்), பிஜிஏஎல்எல்பி (ஆனர்ஸ்) 5 ஆண்டு கால இளங்கலை சட்டப்படிப்புகளும் சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு கால பிஏஎல்எல்பி படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
வரும் கல்வி ஆண்டில் (2025-2026) இப்படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 12-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி நிறைவடையும் என சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்தது.
அதன்படி, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. 5 ஆண்டு கால சட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வெவ்வேறு சட்டப்படிப்புகளுக்கான கல்வித்தகுதி, ஆன்லைன் விண்ணப்ப முறை, கல்வி கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களையும் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு 044-24641919, 24957414 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் கவுரி ரமேஷ் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT