Published : 09 May 2025 06:18 AM
Last Updated : 09 May 2025 06:18 AM

பிளஸ்-2 தேர்வு எழுதிய கைதிகளில் 92.31% பேர் தேர்ச்சி

சென்னை: நடப்பாண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வை தமிழக சிறை​களில் உள்ள 2 பெண் கைதி​கள் உட்பட 130 கைதி​கள் எழு​தினர். தேர்வு முடிவு​கள் நேற்று வெளி​யான நிலை​யில், 10 கைதி​கள் மட்​டும் தேர்ச்சி பெற​வில்​லை. புழல் சிறை​யில் தேர்வு எழு​திய 21 பேரில் 18 பேரும், புழல் மத்​திய சிறை​யில் தேர்வு எழு​திய 4 பேரில் 2 பேரும், வேலூர் மத்​திய சிறை​யில் தேர்வு எழு​திய 9 பேரில் 5 பேரும், கடலூர் மத்​திய சிறை​யில் தேர்வு எழு​திய 7 பேரும் தேர்ச்சி பெற்​றுள்​ளனர்.

இதே​போல கோவையில் 20, சேலத்​தில் 8, திருச்​சி​யில் 22, மதுரை​யில் தேர்வு எழு​திய 30 பேரில் 29 பேரும், பாளை​யங்​கோட்​டை​யில் 7 பேரும், மதுரை மற்​றும் திருச்சி பெண்​கள் தனிச்​சிறை​யில் தலா ஒரு​வரும் தேர்ச்சி பெற்​றனர்.

பாளை​யங்​கோட்டை மத்​திய சிறை கைதி மீனாட்சி சுந்​தரம் 524 மதிப்​பெண்​களும், அதே சிறைக் கைதி வைத்​திலிங்​கம் 517 மதிப்​பெண்​களும், சேலம் மத்​திய சிறைக் கைதி கனிவளவன் 511 மதிப்​பெண்​களும் பெற்​றுள்​ளனர். இவர்களுக்கு தமிழக சிறைத்​துறை கூடு​தல் டிஜிபி மகேஷ்வர் தயாள், சிறைத்​துறை தலை​மை​யிட ஐஜி கனக​ராஜ் வாழ்த்​து தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x