Published : 03 May 2025 04:05 AM
Last Updated : 03 May 2025 04:05 AM

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு

சென்னை: இளநிலை மருத்​து​வப் படிப்​பு​களுக்கு 2025-26-ம் கல்​வி​யாண்டு சேர்க்​கைக்​கான நீட் தேர்வு நாளை மதி​யம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறை​யில் நடை​பெறவுள்​ளது. இந்த தேர்​வெழுத நாடு முழு​வதும் சுமார் 22 லட்​சம் பேர் விண்​ணப்​பித்து உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

நீட் தேர்வு தமிழ், ஆங்​கிலம், இந்​தி, குஜ​ராத்தி உட்பட 13 மொழிகளில் மொத்​தம் 720 மதிப்​பெண்​ணுக்கு நடத்​தப்​படும். தேர்வு மையத்​தில் பின்​பற்ற வேண்​டிய நடை​முறை​கள் ஹால்​டிக்​கெட்​டில் தெளி​வாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளன.

அதன்​படி தேர்வு மையத்​துக்​குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்​களுக்கு அனு​மதி தரப்​படும். தேர்​வர்​கள் மையத்​துக்​குள் மதி​யம் 1.30 மணிக்​குள் வந்​து​விட வேண்​டும். அதன்​பின் வருபவருக்கு எக்​காரணம் கொண்​டும் அனு​மதி தரப்​ப​டாது. இதுகுறித்த கூடு​தல் தகவல்​களை http://neet.nta.nic.in என்ற இணை​யதளத்​தில் மாணவர்​கள் அறிந்து கொள்​ளலாம் என்று என்​டிஏ அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x