Published : 25 Apr 2025 06:54 AM
Last Updated : 25 Apr 2025 06:54 AM

கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் ஜூன் 16-ம் தேதி மீண்டும் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து அனைத்து வகை கல்லூரிகளும் ஜூன் 16-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என மாநில கல்லூரி கல்வி ஆணையர் இ,சுந்தரவள்ளி அறிவித்துள்ளார்,.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஏப்ரல்/மே மாத செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பிஏ, பிஎஸ்சி., பிகாம். பிபிஏ, உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுதி வருகின்றனர். செஸ்டர் தேர்வுக்கு பிறகு மே மாதம் கல்லூரி மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்குகிறது.

ஒரு மாத கால கோடை விடுமுறைக்கு பிறகு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரி, தனியார் கல்லூரி மாணவர்களுக்கு 2025-26-ம் கல்வியாண்டு செமஸ்டர் வகுப்பு ஜூன் 16-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாநில கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கோடை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படும் நாள் ஜூன் 16-ம் தேதி ஆகும். எனவே, 2025-2026-ம் கல்வி ஆண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 16-ம் தேதி (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்படும்" என கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x