Published : 21 Apr 2025 06:16 AM
Last Updated : 21 Apr 2025 06:16 AM

10, 11-ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள்: மாநிலம் முழுவதும் இன்று முதல் தொடங்குகிறது

படம்: மெட்டா ஏஐ

சென்னை: 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிகள் மாநிலம் முழுவதும் இன்று (ஏப்ரல் 21) முதல் தொடங்கவுள்ளதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த பொதுத் தேர்வை சுமார் 26 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

இதில் 12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கு ஏப்ரல் 19-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 21-ம் தேதி விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே கிறிஸ்துவ பண்டிகையான புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் டே-வை முன்னிட்டு விடைத்தாள் திருத்துதல் பணிக்கு ஏப்ரல் 19-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு இன்று(ஏப்ரல் 21) முதல் தொடங்குகிறது.

இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 80-க்கும் மேற்பட்ட தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், ஏப்ரல் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த திருத்துதல் பணிகளில் சுமார் 95 ஆயிரம் ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட பணிகளை முடித்து இரு வகுப்புகளுக்கும் திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 19-ல் வெளியிடப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x