Published : 16 Apr 2025 05:33 AM
Last Updated : 16 Apr 2025 05:33 AM
சென்னை: பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்றுடன் முடிந்துவிட்டது. மேலும், இறுதித் தேர்வான சமூக அறிவியல் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இதையடுத்து பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதி நாளான நேற்று சமூக அறிவியல் பாடத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
இதையடுத்து விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஏப்ரல் 21 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 88 தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளில் சுமார் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT