Published : 15 Apr 2025 07:45 AM
Last Updated : 15 Apr 2025 07:45 AM
சென்னை: பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்றுடன் (ஏப்.15) நிறைவு பெறுகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இதையடுத்து பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதன்படி தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன.
இதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்றுடன் (ஏப்.15) நிறைவு பெறுகிறது. இறுதி நாளில் சமூக அறிவியல் பாடத் தேர்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பொதுத்தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்கள் 118 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.
அங்கிருந்து திருத்துதல் மையங்களுக்கு ஏப்.17-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து ஏப்ரல் 21 முதல் 30-ம் தேதி வரை விடைத்தாள் திருத்துதல் பணிகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT