Published : 12 Apr 2025 05:38 AM
Last Updated : 12 Apr 2025 05:38 AM
சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, அறிவியல் பாடத் தேர்வு நேற்று நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 4,113 மையங்களில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர்.
இதற்கிடையே, அறிவியல் பாடத் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். 2 மற்றும் 4 மதிப்பெண் பிரிவு கட்டாய கேள்விகள் மட்டும் சற்று கடினமாக கேட்கப்பட்டன.
மற்றப் பகுதி வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்தன. மாணவர் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட உயரும் என்று ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடைசித் தேர்வான சமூக அறிவியல் தேர்வு வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. அத்துடன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT